Popular

யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட திரு ஓய்வுநிலை விஞ்ஞான ஆசிரியர் திரு செல்லத்துரை கணேஷமூர்த்தி அவர்கள் இன்று 19-06-2024ம் திகதி புதன்கிழமை உளவிக்குளம்  விநாயகன் திருப்பாதம் அடைந்தார் என்ற செய்தியை அன்னாரின் அன்பு மாணவர்களுக்கும், உறவுகளுக்கும்  அறியத் தருகின்றோம்.அன்னார் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராகவும், பகுதித் தலைவராகவும் சிறப்பான ஆசிரிய பணியை ஆற்றி இருந்தார்.பாடசாலை மீதும் மாணவர்கள் மீதும் அதீத அன்பு கொண்டிருந்தார்.அன்னாரின் இழப்பு பேரிழப்பாகும்.அமைதியான சுவாவவும் மென்மையான பேச்சும் அனைவரையும் அணைக்கும பண்பும் பிறருக்கு உதவும் நல்மனமும் அன்னார் மீது அனைவர்க்கும் அதிக பிரியத்தை ஏற்படுத்தி  இருந்தார்.அன்னாரின் ஆத்மா சித்தி விநாயகன் பாதங்களில் அமைதி கொள்ளட்டும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *