யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் இராசதுரை அவர்கள் 10.12.2024) செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – தில்லைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,கணபதிப்பிள்ளை – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,வசந்தமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,இராசரத்தினம், காலஞ்சென்ற தளையசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ஐங்கரன் (பிரான்ஸ்), சர்மினி, பன்னிருகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தனுசா (பிரான்ஸ்), இளங்குமரன் (ஆசிரியர் – யா/கைதடி குருசாமி வித்தியாலயம்), கிறிஸ்ரினா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,திக்சிகா (பிரான்ஸ்), அஜய் (பிரான்ஸ்), ஆகாஸ் (பிரான்ஸ்), அக் ஷயன், லக்ஷயன், றயான் (பிரான்ஸ்), எபான் (பிரான்ஸ்), மைவா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,சிவசோதியம்மா, பொன்னம்மா, காலஞ்சென்றவர்களான தில்லை நடராஜா, சிவஞானசுந்தரம், புஸ்பமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
