இல-287 1/5, மோதரை வீதி, கொழும்பு-15 யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சுப்பிரமணியம் அருள்குமார் அவர்கள் 15-11-2025 சனிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (முன்னாள் பங்காளி – கிரவுண் டிரேடர்ஸ், யுனைட்டட் ஸ்டோர்ஸ்) – தவமணி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,சுவேந்திரா தேவி அவர்களின் அன்புக் கணவரும்,தயானி, தீபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுரேஸ்குமார் (இலண்டன்), ரஞ்ஞனி (நாவலை) ஆகியோரின் சகோதரனும்,சுஜீத், யசீவன் (இலண்டன்) ஆகியோரின் சித்தப்பாவும்,மேகலா, சங்கர்நாராயணன் ஆகியோரின் மைத்துனரும்,வர்ஷா, வித்தால், வடஸன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Overview
- Funeral Status: Completed
