New

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கற்சிலைமடு, ஒட்டுசுட்டானை வாழ்விடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அப்பாத்துரை குமாரசுவாமி (J.P) அவர்கள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை – நகுலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்க்கண்டு – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மணிமேகலை அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற விஜிதி (முன்னாள் பிரதி அதிபர் – சைவ மங்கையர் வித்தியாலயம்), விமலன் (பிரான்ஸ்), விஜிதா (இலண்டன், முன்னாள் ஆசிரியை – இறம்பைக்குளம் மகா வித்தியாலயம்), விஜியா (ஆசிரியை – தெகிவளை தமிழ் மகா வித்தியாலயம்), Dr. வாசுகி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,புவனேஸ்வரி, தியாகராஜா, காலஞ்சென்ற குணசிங்கம், கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கருணானந்தன், வசந்தராஜீவி, ஜெயக்குமார், மதிவண்ணன், நிரஞ்ஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,கஜானன், மதுமிதா, கஹானா, ஹரிஷன், தக்ஷின்யா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,கிருஷிகா, ரஷிகா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *