யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Brisbane வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி மனோகரி பூரணம்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீண்ட பயணம் சென்றுவிட்ட
எம் அன்னையே!
நித்தமும் தவிக்கின்றோம்
நின் பிரிவால்
நீங்காது உங்கள் நினைவலைகள்
எமை விட்டு!
எங்கள் பாசமிகு அன்னையே
எத்தனை காலங்கள் சென்றாலும்
மறக்க முடியுமா உங்களை
உங்கள் பாசமிகு அரவணைப்பும்
கனிவான பேச்சும் ஆண்டாண்டு
சென்றாலும் நீங்காது எம்மை விட்டு
உங்கள் நினைவுகளை
சுமந்தபடி நாங்கள் உங்கள்
ஆத்மா சாந்தியடைய
இயேசுவை வேண்டி நிற்கிறோம்
