காதோரம் வந்த செய்தி பொய்யாகிப் போகாதோ!!!- காத்தான் சித்தப்பா எமை விட்டு சென்றார் என்ற செய்தி…..கனவாகிப் போகாதோ…. புங்கை மண் பெற்றெடுத்த மைந்தன்….புகழுடல் நீத்தார் என்ற செய்தி பொய்யாகிப் போகாதோ… புன்னகைக்கும் அழகும்…புத்துணர்வாய் பேசி.உறவுகளோடே உறவாடும் தற்பெருமை அற்ர நல்லுள்ளம் விடை பெற்றார் எனும் செய்தியை ஏற்க மனம் மறுக்கிறது….ஆயினும் இறைவன் தம்மை – தன் பாதார விந்தங்களில் இளைப்பாற அழைத்து விட்டான்..என்செய்வோம்…இறைவா எம் சித்தப்பா வின் ஆத்மா சாந்தி பெற …உனது கழல் பணிகின்றோம்…. ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Tribute by
SASIKUMAR PATHMANATHAN
Sasikumar
