யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையைப் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் நீக்கிலாப்பிள்ளை சந்தியாப்பிள்ளை அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமானவரே, நிலவாய்
எங்கள் வாழ்வில் ஒளி வீசினீர்கள்,
என்றும் எம் இதயத்தில் அழியா
உருவம்கொண்டு எங்கள் அன்பு தெய்வமாய்
வலம் வந்தீர்கள், என்று காண்போமோ
உங்கள் முகம், உங்கள் முகம் காணஏங்கி
தவிக்கிறது எங்கள் உள்ளங்கள்…உங்களை இழந்து துணையின்றி
நிர்கதியாய் நிற்கின்றோம்
விதியோ, சதியோ எம்மை பிரித்துவிட்டது
இனி என்று காண்போமோ உங்கள் முகம்
இன்னும் எத்தனை ஜென்மங்கள்
சென்றாலும் உங்களை எங்கள்
இதயத்தில் வைத்து பூசிப்போம், எங்கள்
அன்பானவரே உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் வாழ்வில்
நிழலாக தொடரும்..
