யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா நாகராசா அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – செல்லமுத்து தம்பதியினரின் மூத்த மகனும்,காலஞ்சென்ற சீதாலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பற்மமதி (கிளி), சிங்கராசா (பிரான்ஸ்), காலஞ்சென்ற கர்ணன், நாகசோதி (இலங்கை), சிவராசா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
