யாழ் நல்லூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் சஞ்ஜீவன் அவர்கள் நேற்று 08-01-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் சற்குணகுமாரி (குஞ்சு) தம்பதியரின் பாசமிகு ஏக புதல்வனும்,
சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும்,
அம்பிகா (கமநல சேவை நிலையம், உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும்,
கிஷோனனின் பாசமிகு தந்தையும்,
கீர்த்திகாவின் பாசமிகு சகோதரனும்,
சிவதீபனின் பாசமிகு மைத்துனரும்,
ஏரகன், ஓவியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவகுமார் கவிதா, சுப்பிரமணியம் கௌரி, சுப்பிரமணியம், புஷ்பகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 10-01-2023ம் திகதி செவ்வாய்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நல்லூரில் உள்ள அவரது இல்லமான இல.12 ,சங்கிலியன் வீதியில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- க
Overview
- Funeral Status: Completed
