யாழ். தெல்லிப்பழை புதுத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் தவமணி அவர்கள் 09-11-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்ணர் சரவணமுத்து சிதம்பரம் தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா இராஜலிங்கம் (புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகாந்தன், சுபோதினி, சுடர்வதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இளங்குமரன், குணசீலன், சுஜாத்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற செல்வராசா, சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராசா திருமணி, சிவராஜா நிர்மளா ஆகியோரின் அருமை மைத்துனியும்,
சிந்தூரி, தக்ஷினி, கவிலாஷ், ஆரணிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தமிழ் தகவல் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மனோகாந்தன் (மகன்)+947771
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
