Popular

யாழ். சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும், தொல்புரத்தை வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் இன்று 26-06-2025 வியாழக்கிழமை தனது வீட்டில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் சுப்பிரமணியம் (தொல்புரம் சத்தியமனை நூலகத்தின் ஸ்தாபகர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற தோழர் சத்தியராஜன் (மீரான் மாஸ்ரர்), திருமதி. சத்தியமலர் ரவீந்திரன் (பபி), சத்தியகீர்த்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *