Rest in Peace
11 JAN 1981 – 30 OCT 2019
இறுதி நேரத்தில் நீண்ட நேரம் உங்கள் பெற்ற தாயை பற்றோடும் இனி எப்போ என்ற தோரணையில் பரிதவிப் போடும் உங்கள் பூவிழிகள் திறந்த வண்ணம் உற்றுநோக்கி நீங்களே. இறுதியில் பூவிழிகள் மெல்ல மூடி தாயின் கைபட்டு ஒரு கவளம் நீர் பருகி, விரைந்து சென்று மறைந்தாயே தெய்வமகனே. அருமை தம்பி தவிக்கிறார் உங்களை காணாமல். உங்கள் இனிய தங்கை எத்தனையை தாங்குவது, பிஞ்சு உள்ளம் ஏங்கித் தவிக்கிறது. அம்மா அப்பா கண் விழித்ததும் தினமும் நெஞ்சம் உருகி குமறி பார்க்கும் திசையெல்லாம் செல்லுமிடமெல்லாம் பழகும் விதம் எல்லாம் உங்கள் நினைப்பே நிறைந்த வண்ணம் உள்ளது .உங்கள் சிறு பிராயம் தொட்டு தலையில் குட்டி தோப்புக்கரணம் போட்டு கும்பிடும்போது எம் மனதில் நல்ல அபிப்பிராயம் தும்பிக்கையான் என்றும் நல்வழி துணை நிற்பார் என்று தோன்றும் நம்பினோம். சாவதற்கும் நோயின் தொல்லையில் அவஸ்தைப்படுவதற்கும் வயதெல்லை வேண்டாமா? நினைப்பதெல்லாம் நடக்கும் என்றால் தெய்வம் ஏதுமில்லை. எங்கள் ராஜகுமாரா தீராத கவலையிலும் கொடும் வேதனையிலும் ஒரு கணம் அப்பாவுக்கு உங்கள் தற்காப்பு த
