யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டு தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா செல்வரட்ணம் அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து – பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் – இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம் (பொறியியலாளர் – RDA) அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாகரன் (ICS Study, Abroad), பக்தகௌரி (SGS Lanka, Colombo) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லக்ஷ்மப்பிரியா (ஆசிரியை சைவமங்கையர் வித்தியாலயம், வௌ்ளவத்தை), ரகுசுதன் (Rezgateway) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெய்சாயி நிகேதன் (S. Thomas College Mount Lavinia), தரணியா (Colombo Ladies College) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 04-01-2024 வியாழக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 3.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று மாலை 4.00 மணியளவில் கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை
Overview
- Funeral Status: Completed
