யாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரத்தின ஐயர் கோடீஸ்வர் ஐயர் அவர்கள் 17-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தின ஐயர் – இராசேஸ்வரி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செந்தூர் செல்வி அம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,பரமேஸ்வரன், உமாபதிஸ்வரக்குருக்கள் (சூட்டி ஐயா), இரத்தினேஸ்வரி (கனடா), விக்கினேஸ்வரன் (வலயக்கல்வி பணிமனை, மருதனார்மடம்), வித்தியானந்தன் (கிளிநொச்சி), மங்களேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-10-2025 சனிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் கீரிமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கீரிமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
