யாழ். வேலணை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் புவனேஸ்வரி அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா நாகம்மா(கண்மணி) தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இரட்ணகுமார் (குமார்), ராஜகுமார் (ரவி), பதுமநிதி, கீதராணி, லலித்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திராதேவி, தர்மராஜ், நடனசபேசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கௌரிலட்சுமி (புஷ்பம்), சாரதாம்பிகை (சாந்தா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற பூபாலகுணசிங்கம், திருப்பதிசிவம், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், செல்வேந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,
பிரகாஷ், மனோ, ஆகாஷ், சந்துரு ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
விஜயதர்ஷன், தயாதர்ஷன், தனதர்ஷன், தர்ஜிதா, லுக்ஷன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
