மட்டக்களப்பு ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை செல்வரட்ணம் அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை-தங்கரத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வரும், Dr. சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,Dr. கவீஷா, Dr.உதாரன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,Dr.சஞ்சீவின் மாமனாரும்,காலஞ்சென்றவர்களான தனலக்ஷ்மி, வினாயகமூர்த்தி, குழந்தைவேலு, லோகிதப்பிள்ளை மற்றும் திலகவதி, லீலாவதி, மாணிக்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-06-2024 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 மணியிலிருந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
Overview
- Funeral Status: Completed
