யாழ். அளவெட்டி பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை ராமநாதன் அவர்களின்1ம் ஆண்டு நினைவஞ்சலி .இவ்வுலகை விட்டு ஓர் ஆண்டு நிழல் போல் மறைந்தாலும் உங்கள் கனிவான பாசமிகு பார்வை எம் அனைவரது இதயங்களில் இருந்து என்றுமே மறைவதில்லை. “மகள்” என்ற உங்கள் இனிமையான குரல் ஓசை என்றும் எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. குழந்தையாக இருந்த போது உங்கள் பாசமிகு தோள்களில் அரவணைத்து தாங்கி, கரம் பிடித்து நடை பயிற்றுவித்ததை எங்கள் இதயம் மறக்குமா? மீண்டும் ஒருமுறை வந்து எங்களுக்கு தந்தையாய் பிறப்பீர்களா?உங்கள் தூய ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். தகவல்:- திருமதி. ரோஸ்மி துஷாந்தன்.அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.
