யாழ் ஆவரங்கால் கிழக்கை பிறப்பிடமாகவும் ஆவரங்கால் மேற்கு சிவன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற பனை தென்னை அபிவிருத்தி சங்க ஊழியரும், ஆவரங்கால் சர்வோதய சன சமூக நிலைய மற்றும் ஞான வைரவர் ஆலய நிர்வாகங்களில் உறுப்பினராகவும், முக்கிய பதவிகளையும் வகித்த திரு.ஆழ்வான் சந்திரநாதன் அவர்கள் இன்று (29.05.2023) அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
இவர் காலம்சென்றவர்களான திரு &திருமதி கனகன் பூரணம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
பேபி அவர்களின் அன்பு கணவரும்,
கேமினன், கேமினா, கேமலோசன், மற்றும் கேமபாலன் ஆகியோர்களின் அன்பு தந்தையாரும்
எமது ஒன்றிய முன்னாள் தலைவர் திரு. க. தவராஜா மற்றும் நிகழ்கால ஆலோசகர் திரு. க. நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் எமது ஆழ்ந்த துக்கத்தை பகிர்ந்து கொள்கிறோம்.
ஆவரங்கால் சர்வோதய வெளிநாட்டு அபிவிருத்தி ஒன்றியம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...