யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இலங்கையர் ஸ்ரீகுகஞானசோதி அவர்கள் 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இலங்கையர் (இலங்கை வாத்தியார்) – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – இராசமலர் தம்பதியினரின் மூத்த மருமகனும்,புவனேஸ்வரி (பவளம் அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற தன்மாவரதரின் (புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி) ஒன்று விட்ட சகோதரனும்,கிருத்திகா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் – பூநகரி), தினேஷன் (மின் இணைப்பாளர்), விதூஷன் (இலங்கை மேர்ச்சன்ட் வங்கி யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பாலமுருகன் (அதிபர் – யாழ். அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மாமனாரும்,அகரனின் பாசமிகு பேரனும்,இராஜேஸ்வரி, பரமேஸ்வரி (ஓய்வு நிலை ஆசிரியை – யாழ். பளை இந்து ஆரம்பப் பாடசாலை), விக்னேஸ்வரன் (அமெரிக்கா), யோகேஸ்வரி, தியாகேஸ்வரி, ஜெகதீஸ்வரி (சி.க.கூ. கிளிநொச்சி), பத்மகுமாரி (சுவிஸ்), சுதாஜினி (ஜேர்மனி), சுதாகரன் (கனடா) ஆகியேரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
