நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானத்தில் வருடாவருடம் மாலை அணிந்து சபரிமலை புனித யாத்திரை செல்பவரும்,நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களான தினேஷ் மற்றும் பவி சகோதரர்களின் தந்தையாரும்,திபாகர் சகோதரனின் மாமனாருமாகிய கந்தசாமி விக்னேஷ்வரன் சுவாமி ஐயனை தரிசித்து சபரிமலை சென்று திரும்பிய வேளையில் 08-01-2026 வியாழக்கிழமை அன்று இந்தியாவில் ஐயனின் பாதத்தில் சரணடைந்தார்.இறுதி கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்பு அறியதரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
