யாழ். புத்தூர் கிழக்கு புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவக்கொழுந்து இராசையா அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி – கற்பகம் தம்பதியினரின் இளைய மகளும்,இராசலிங்கம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,விஸ்ணுகரன் (கனடா), காலஞ்சென்ற சத்தியபாமினி சதீஷ்கரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரூபராணி (கனடா), தனரூபினி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஜதுஷன், பூமிகா, டனிஷன், மானஷா, யாஸ்வின் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், தங்கம்மா, கனகம்மா மற்றும் சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அந்திரானை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Overview
- Funeral Status: Completed
