Popular

எமது ஸ்ரீ மகாமாரி அம்மன் ஆலய நிறுவுனர் தர்மகர்த்தா திரு. அரவிந்தகோஸ் (சோமா) அவர்கள் 15/3/2026 அன்று இறை பதம் அடைந்தார்.இவர் புங்குடுதீவு 5 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இறுப்பிட்டி, ஜெர்மனி சார்புரூக்கனை வசிப்பிடமாகவும் கொண்டு, சோமாபிற்சேரியா மூலம் பிரபல்யமாகி தன் தனி முயற்சியால் #சார்புரூக்கன் சுல்ஸ்பாக் நகரில் ஸ்ரீ மகாமாரி அம்மன் ஆலயத்தை நிறுவி #சார்புரூக்கன் வாழ் மக்கள் வழிபட வழிகாட்டியாக இருந்தார். நோய்வாய்ப்பட்டு இருந்த காரணத்தினால் சென்னையில் தங்கி வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார். இடி என இறங்கிய செய்தி அவர் காலமாகிவிட்டார் என வந்தது. இப்பூமியில் பிறந்தவர் எல்லோருக்கும் மரணம் என்பது நியதியே.  பிரிவால் துயருறும் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அரவிந்தகோஸ் (சோமா) ஐயாவின் ஆன்மா இறைவன் அடியில் இழைப்பாறி ஆன்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல மகாமாரி அம்மனைப் பிரார்த்தனை செய்வோமாக.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *