New

கண்டி – கெட்டபுலாவைப் பிறப்பிடமாகவும், இல- 20/4, மாதம்பிட்டிய வீதி, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லம்பரம் ராமலிங்கம் அவர்கள் 05-08-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், யமுனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ரஞ்ஜனி, ரஞ்ஜித்குமார், ரவிக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,அஷோக்குமார், புவனேஸ்வரி, லோகதர்ஷனி ஆகியோரின் மாமனாரும்,ரிதீஷ், ராகேஷ், அனுஷ்கா ஆகியோரின் செல்லத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-08-2026 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் 08-08-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.”மலைகளின் அரசனாக துள்ளித்திரிந்த எம் மலையரசன் மீளாத் துயில்கொள்ள விம்மும் இதயம் மறவாது உங்கள் பசுமையை” இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *