யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தசாமி பொன்னம்பலம் அவர்கள் 24-08-2026 திங்கட்கிழமை அன்று அதிகாலை கொழும்பில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – தங்கம்மா தம்பதியினரின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (பயில்வான்) – பரமநாயகி தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற மாகாலக்ஷ்மிதேவி (குட்டியாச்சி) அவர்களின் அன்பு கணவரும்,வாசுகி, கதாதரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சபாநாதன், சுகந்தி, சௌமியா ஆகியோரது மாமனாரும்,ஜீவிதன், பார்கவி, ஆதர்க்ஷ், ஆனிக்ஷ், அக்ஷை, அகிலேக்ஷ், அக்ஷரா, ஆகியோரின் பேரனும்,யுவன், ஜான்வி, ஆரியன், வேதாந்த் ஆகியோரின் பூட்டனும்,காலஞ்சென்றவர்களான உருத்ராபதி, மகாலக்ஷ்மி, சோமசேகரம், பாக்யலக்ஷ்மி, தனலக்ஷ்மி, ராஜலக்ஷ்மி, ராதாகிருக்ஷ்ணன், மற்றும் ஜெயலக்ஷ்மி அவர்களின் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
