காரைநகர் சிவன் கோவிலடியை சேர்ந்த திரு. விஸ்வநாதஐயர் ஈஸ்வர குருக்கள் அவர்கள் 17-06-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவசாயுஜ்யம் அடைந்து விட்டார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வநாத ஐயர் – திருவேங்கட அம்மா (மீனாம்பாள்) தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கணபதீஸ்வரக்குருக்கள் – சிவயோகசுந்தராம்பாள் தம்பதியினரின் அன்பு பேரனும்,காலஞ்சென்ற நாகேஸ்வர சர்மா, இராசலட்சுமி அம்மா, காலஞ்சென்றவர்களான கார்த்திகாயினி அம்மா, பரமேஸ்வரி அம்மா மற்றும் ஈஸ்வரி அம்மா, காலஞ்சென்ற பரமேஸ்வர சர்மா ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
