யாழ்.மாதகல் நாவலர் வீதியை பிறப்பிடமாகவும், இத்தாலி – பலர்மோவினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தசாமி அப்புத்துரை அவர்கள் 19-03-26 வியாழக்கிழமை மாதகலில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மின்னொளி அப்புத்துரை தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்றவர்களான ஈஸ்வரமூர்த்தி, புலேந்திரராசா மற்றும் துரைராசா, துரைசிங்கம் ஆகியோரின் அன்புத் தமையனும்,காலஞ்சென்ற பாக்கியலட்சுமி அவர்களின் அன்பு கணவரும்,தர்மராஜா, கேதீஸ்வரன், மோகனகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சர்மினி, சிவகலா, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வு பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
