Popular

யாழ். இணுவில் தெற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவரான  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவரான லவன் அக்சயன்  இன்று சனிக்கிழமை (04.04.2026) காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த ஆண்டு வெளியாகிய உயர் தர பரீட்சை முடிவுகளில் 3A பெற்று மாவட்ட நிலை 24, மற்றும் தேசிய நிலை 265 இனை அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கல்வியில் சாதித்த குறித்த மாணவனின் இழப்பு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிவால் துயருறும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *