யாழ் / கரவெட்டி நவிண்டில் சக்கலாவத்தை ஞானபைரவர் கோவிலடியை பிறப்பிடமாகவும், பொலிகண்டி உப்புகிணத்தடி பிள்ளையார் கோவில் மற்றும் முனீஸ்வரம் வடிவாம்பிகை சமேத முன்னைநாத ஈஸ்வரர் ஆலயத்திலும் குருத்துவப் பணி செய்து பின்னர் கொழும்பு அழுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ ரெங்கசாமி சர்மா நடராஜ குருக்கள் அவர்கள் 30-08-2027 ஞாயிற்றுக்கிழமை இன்று சிவபதம் அடைந்தார்.அன்னார் அமரர் ரெங்கசாமி சர்மா ரட்ணாம்பாள் அம்மையாரின் மூத்த புதல்வரும், முனீஸ்வரம் அமரர் லீலாம்பிகை அம்மையாரின் கணவரும் ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனைப் பிரார்த்தித்து அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி. Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம் சுன்னாகம், இலங்கை.சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர், சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர். நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
Overview
- Funeral Status: Completed
